Tuesday, March 30, 2010

விழிப்புணர்ச்சி

நினைத்து நினைத்து உறக்கம் வரவில்லை
காரணம் இந்திய விழிப்புணர்ச்சி
இன்று இதன் விலை நூறு கோடி
ரூபாயல்ல மக்கள்

உள்காயம்

கீழே விழுந்து கை உடைந்தது
உள்காயம் தான் அதிகம் வலித்தது
நலம் விசாரிக்காத நட்பின் மெளனம்

கைக்குள்ளே ப்ளேட்டு, வெளியே கைகட்டு
தூக்க முடியாது மனம் தவித்தது
எதற்கோ அழும் என் கைக்குழந்தை

Monday, March 29, 2010

தேர்தல்

கஞ்சிக்கு தான் வயிறு காயுது

கலர் டிவிதான் இலவசமாய் பாயுது

சீரான ரோடு ஒண்ணு இங்கில்ல

சீரியலுக்கு டிவியில் கொறச்ச்ல் இல்ல

சிலிண்டர் வெலை சூப்பரா ஏறுது

காஸ் ஸ்டவ் ·ப்ரீயாக கெடைக்குது

வாய்க்கு ருசியா துண்ண சோறில்ல

வாக்குறுதியால் வவுறு ரொம்பவில்ல


தாகமா எடுக்குது தண்ணிக்கு தவிக்குது

கட்சிகள் கவலபடாம வோட்டுகள குவிக்குது

தேர்தல் வந்தால் ஒருமாசம் கொண்டாட்டம்

அப்புறமா அஞ்சு வருஷம் திண்டாட்டம்

கொடி எல்லாத்தயும் எறக்கிக் கட்டு

வீராப்பா வேட்டியத்தான் மடிச்சு கட்டு

பாழும் அரசியல ஒழிச்சுக் கட்டு

பாசமான குடும்பத்த நெனச்சுப் புட்டு

வேலயமட்டும் பாரு, உருப்படும்டா ஊரு

Sunday, March 28, 2010

பதில் கவிதை

ஆ, இதென்ன கவிதை போல் தெரிகிறதே!!
என் அன்பு நண்பனுக்கு இன்னும் மணமாகவில்லை
இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறான்
அதனால் இன்னும் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்

நிற்க.
உன் இதழில் புன்னகை வரவேண்டி
எழுதிய வேடிக்கை வரிகள் அவை
சற்று நேரம் சிரிக்கலாம்
பின் அதை மறக்கலாம்.

அன்பு பாராட்டும் உன் கவிதையில்
உன் அன்பு நெஞ்சத்தைக் கண்டேன்
அது கடல்போல் என்றும் வற்றாது பொங்க
கடவுளையும் கொஞ்சம் வேண்டிக் கொண்டேண்.

நண்பா, கொண்ட அன்பால் பல நல்லவை
பலவாறு பெருகப் பார்த்திருப்பாய் நீ
ஆனால் அந்த அன்பால் ஒன்று குறைவதும்
ஒன்று கூடுவதும் எப்படி என விளக்கவா?

ஆணும் பெண்னும் திருமணம் செய்து
கொண்ட அன்பால் இரண்டு உள்ளங்கள்
ஒன்றாகக் குறைந்த்து,
ஒன்றுகூடியதால் ஒன்று கூடியது

இந்த வருடத்தில், நாங்கள் காத்திருக்கிறோம்
உன்னிடமிருந்து அழைப்பிதழ் வர
அன்புடன் உன்னிடம் உரிமையாய் அதட்டுகிறேன்
டேய் கல்யாணம் பண்ணிக்கோடா. வாழ்க

கவிதை ஒன்றே

நான் படித்த பல கவிதைகள்
என் நினைவில் நின்றாலும்
இதயத்தில் பிடித்து நின்ற கவிதை
நீ மட்டும் தான்.

இலக்கணத்தில்
இதுவரை படித்ததில்லை
இரெண்டெழுத்தில் ஒரு கவிதை
உன் பெயர்

உன்னைப் பார்த்த பின்னே உணர்ந்தேன்
இரண்டடி நான்கடி மட்டுமன்றி
ஐந்தடி ஆறுஅங்குலத்திலும் கூட
கவிதை உலகில் உண்டென்று!!

கவிதை என்று சொன்னாலே
சீச்சீய்ய் என்றிருந்த நான்
உன்னுடன் வாழ்ந்த பின்னே
உணர்ந்தேன் நீ சொல்லும்
சீச்சீய்ய் கூட கவிதையென்று

இரு வரிக் குறளில் கூட
ஒரு பொருள் தான் உண்டு
பல பொருள் பொதிந்து இருக்கும்
கவிதை ஒன்று, இரண்டே வார்த்தையில்
உன் இதயம்.

எனக்குத் நன்றாகத் தெரியும்
உனக்கு கவிதைகள் படிக்க
நேரமே இல்லை என
உனக்காகவே எழுதினேன் உலகின்
ஒன்லி ஒரெழுத்துக் கவிதை
நீ!!