Monday, December 18, 2006

கவிதை - காதல் சுவடி

ண்ணே காதல் மட்டுமல்ல
காத்திருத்தலும் கடினம் தான்.
கிடைத்து விட்டால் மனமுவக்கும்
கீழ்வானும் கைக்கு எட்டும்
குடும்பம் குழந்தை குதூகலம்
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
கெஞ்சி இறைஞ்சும் என்மனம்
கேட்டு மாறுமோ உன்மனம்?
கைபிடிப்பாயா? கை விடுவாயா?
கொள்வாயா? எனை கொல்வாயா?
கோவிலில் திருமணமா இல்லை
கெளதமனின் போதிமரத்தடி தானா?

Labels: , ,

Tuesday, December 12, 2006

சிலேடைச் சிதறல்கள்

கழுத்தில் கயிறிருக்கும், மணிமணியாய் பேசும்
காதுமடல் சிவக்கும், கண்டபடி செலவுவைக்கும்
காலப்போக்கில் மற்றவர் கொண்டதே சிறந்ததென
தோன்றும் கைப்பேசியும் கைத்துணையும் ஒன்றே!

குறை காணும் உரக்கப் பேசக்கேட்கும்
புட்டிகள் தேடும் அன்புக்குட்டிகள் தேடும்
ஆட்டம் போடும் தக்கதுணை பார்க்கும்
பருவம் இளமையோ இல்லை முதுமையோ?

சற்றே கசக்கும் அனுபவம் கொண்டவர்
சர்க்கரை சேர்ப்பர் முழுதும் உட்கொண்டால்
புத்துணர்ச்சி கிடைக்கும் பின்மற்றவர்க்கு நாம்
பரிந்துரைக்கும் அறிவுரையும் கா·பியும் ஒன்று

ஆழமுண்டு அதில் மூழ்கின் முத்துண்டு
இணைவுண்டு இது பெருகுவதும் உண்டு
புயலெனில் அழிவும் உண்டு. உலகெங்கும்
நிறைந்துள்ள கடல் காதல்போல் ஆனதே.

Labels: , , , ,

Wednesday, December 6, 2006

கவிதை - என் பிறந்தநாள்

இன்பமாய் இருக்கும்
என் பிறந்தநாள்.
நட்பு எங்கிருந்தாலும்
தொலைபேசியில் வாழ்த்தும்.

காலம் உருண்டோடி
இன்றோ நட்பு
எங்கோ தொலைவாய்,
பேசாமல், வாழ்த்தாமல்!!!

Labels: , , ,

Monday, December 4, 2006

கவிதை - உன் நினைவாய்

கண்ணே உன் கை பிடிக்கத்தான்
வளையாய் வளைகின்றேன்.
உன் கால் பிடிக்க வேண்டுமா?
சொல்!
உன் கைபிடித்து மெட்டியாக மாறி
கால் பிடிக்க காத்திருக்கிறேன்!

Labels: , ,