இனி எல்லாம் சுகமே
இதோ என் நண்பன். சற்றே
இளைத்தாற் போல் தெரிகிறான்.
இருக்கலாம். காதலின் சக்தி அது.
இரும்பைக் கூட உருக்கலாம்.
இத்தனை நாள் நீ காத்திருந்தது
இத்துணைக்காகத் தான்.
இனிமேல் வாழ வேண்டியதும் கூட
இவள் ஒருத்திக்காகத் தான்.
இரவுகளில் இனி இல்லை கனவுகள்
இன்பம் தான். இதமாகவும் தான்.
இரு மனது ஒன்றாய் இணையட்டும்
இல்லறம் இனிப்பாய் இனிக்கட்டும்.
இன்று மட்டுமன்று, என்றுமே உங்கள்
இதயங்கள் மற்றவர் இளைப்பாற நல்
இருக்கைகளாய் இருக்கட்டும். அது போல்
இருகைகளும் இணைந்தே இருக்கட்டும்.
இனிதே வாழ்க!
Labels: இதயங்கள், இல்லறம், இனி எல்லாம், காதலின் சக்தி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home