என்னென்று சொல்ல
தலையோ நரைத்து விட்டது
நடையோ தளர்ந்து விட்டது
பார்வை குறைந்து விட்டது
நினைவுகள் மறந்து விட்டது
எனக்கும் வயதாகி விட்டது
உள்ளங்கள் சுருங்கி விட்டது
உறவுகள் உடைந்து விட்டது
நல்லநட்பு நலிந்து விட்டது
தன்னலம் உயர்ந்து விட்டது
பொதுநலம் படுத்து விட்டது
பொய்கள் பெருகி விட்டது
உண்மைகள் உறைந்து விட்டது
துணிச்சல் தொலைந்து விட்டது
பயத்திடம் பணிந்து விட்டது
இவ்வுலகம் இருண்டு விட்டது
புதியதோர் உலகம் செய்ய
பாரதியாய் பிறக்க வில்லை
அடுத்த பிறவி ஓன்றெடுக்க
பிரம்மா என்னை பணித்திடு
சக்தியுடன் என்னை படைத்திடு
தீமைகளை தீயினால் தீயிட்டு
நன்மைகள் நன்மக்கள் நல்வாழ்வு
இவையே இவ்வுலகென இயக்கவே
என்னைவொரு கிரியா ஊக்கியாய்
உருவாக்கி விடு இறைவா!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home